May 9, 2024

Tamil

நேரலை செய்திகள் புதுப்பிப்புகள்

  • ஹைதராபாத் வரலாற்று சாதனை வெற்றி – ஐபிஎல் பிளே ஆஃப் இழந்து முதல் அணியாக வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்!
    on May 8, 2024 at 6:50 pm

    லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 57ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் ரேஸிலிருந்து வெளியேறியுள்ளது. ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழாவை தோல்வியோடு தொடங்கிய மும்பை இந்தியன்ஸ், அடுத்தடுத்து தோல்வி அடைந்து விமர்சனத்திற்கு உள்ளானது. கடைசியாக ஹாட்ரிக் தோல்விக்கு பிறகு ஒரு வெற்றியை பெற்றது. அதன் பிறகு வெற்றி, தோல்வி, வெற்றி என்று 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி பெற்றது. இதையடுத்து கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றது. இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 12 போட்டிகளில் 4 வெற்றி, 8 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பும் கேள்விக்குறியாகியிருந்த நிலையில், இன்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் வெற்றி பெற்றிருந்தால் மும்பை அணிக்கு ஏதேனும் பிளே ஆஃப் சான்ஸ் இருந்திருக்கும். ஆனால், இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியானது முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் 2024 தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. எனினும், எஞ்சிய 2 போட்டிகள் முறையே 11 ஆம் தேதி கொல்கத்தா அணியையும், 17 ஆம் தேதி லக்னோ அணியையும் எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியானது பிளே ஆஃப் வாய்ப்பை பெற்று எலிமினேட்டர் சுற்று போட்டியில் வெற்றி பெற்று 2ஆவது தகுதி சுற்று போட்டிக்கு முன்னேறியது. இதில், குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த முறை ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. அதுமட்டுமின்றி 12 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று மோசமான சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் 5 முறை சாம்பியனாகிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 57ஆவது லீக் போட்டி ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய லக்னோ 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. பின்னர் எளிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் இம்பேக்ட் பிளேயராக அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஹெட் 16 பந்துகளில் அரைசதம் அடிக்க, அபிஷேக் சர்மா 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஹைதராபாத் ஓவர்களில் 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 167 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக ஐபிஎல் 2024 பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

  • நேரு இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்.. பழைய செய்தி இப்போ ட்ரெண்டிங்.. பாஜக Vs காங்கிரஸ் மோதலில் திடீர் ட்விஸ்ட்.!
    on May 8, 2024 at 6:23 pm

    நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. தற்போது இடஒதுக்கீடு தொடர்பாக ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தையே மாற்றிவிடுவோம். நலிந்த பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை நீக்குவோம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.  பிஜேபி அவர்கள் மத இடஒதுக்கீடுகளுக்கு மட்டுமே எதிரானவர்கள். அரசியல் சாசன இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் அல்ல. இடஒதுக்கீடு குறித்து இரு தேசியக் கட்சிகளும் வாதிடுகின்றன. இந்த வரிசையில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் வெளிவந்துள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர் லால் நேரு இடஒதுக்கீட்டை எதிர்த்தார் என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பழைய கதை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி, “பட்டியல் சாதியினர் (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதை நேரு எதிர்த்தார்” என்றார். இந்த இடஒதுக்கீடு அவர்களிடையே தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது என்ற நேருவின் கருத்தை இக்கட்டுரை தொகுத்து வழங்குகிறது என்பது முக்கியமான விஷயம். ஆனால், இடஒதுக்கீடு தொடர்பாக பாஜக-காங்கிரஸ் இடையே அரசியல் போர் நடந்து வரும் நிலையில் இந்தக் கதை ஆனது மேலும் சுவாரஸ்யமாக்கி உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடஒதுக்கீடு குறித்த முன்னாள் பிரதமர் நேருவின் கருத்து, மோடியின் கருத்துக்கு நெருக்கமானதாகத் தெரிகிறது. எஸ்சி, எஸ்டிகளுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்பது அவர் கருத்து என்றால், இப்போது மோடிக்கு மதரீதியான இடஒதுக்கீடு வேண்டாம். முஸ்லிம்களுக்கான சிறப்பு இடஒதுக்கீட்டை பாஜக கடுமையாக எதிர்க்கிறது. Quote Nehru said that he was against the reservation of jobs for members of the Scheduled Castes and Scheduled Tribes because it tended to create an inferiority complex in them. Unquote Congress has always been against empowerment of SC/ST and OBCs. But PM Modi and BJP will… pic.twitter.com/Zo6C2Azyjz — Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) May 8, 2024 காங்கிரஸ் தனது வாக்கு வங்கிக்காக மதரீதியான இடஒதுக்கீட்டை கொண்டு வருவதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அரசியலமைப்புச் சட்டம் கூட ஏற்கவில்லை. ஆனால், முஸ்லிம் வாக்கு வங்கிக்காக அதை அமல்படுத்துவதாக காங்கிரஸ் உறுதியளிக்கிறது. ஆனால், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தேர்தல் கூட்டங்களில், அதை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க மாட்டோம் என வெளிப்படையாகவே அறிவித்து வருகின்றனர். இந்த வரிசையில்தான் பாஜக இடஒதுக்கீட்டிற்கு எதிரானது என்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்கிறது. அதைத் தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் தற்போது நேருவும் இடஒதுக்கீட்டை எதிர்த்தார் என்ற செய்தி காங்கிரஸை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. பாஜகவும் இதை மக்களிடம் பரவலாக எடுத்துச் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் பாஜக-காங்கிரஸ் இடையேயான இடஒதுக்கீடு சர்ச்சை மீண்டும் ஒரு அதிர்வை இந்திய அரசியலில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?

  • பேட் கம்மின்ஸூக்கு பர்த்டே டிரீட் கொடுத்த ஹெட், அபிஷேக் சர்மா – வரலாற்று சாதனை படைத்த ஹைதராபாத்!
    on May 8, 2024 at 6:16 pm

    ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இன்று தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு பிறந்தநாள் டிரீட் கொடுக்கும் வகையில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி தேடி கொடுத்துள்ளனர். ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 57ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். அதன் படி முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் எளிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பேட் கம்மின்ஸ் இன்று தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு டிரீட் கொடுக்கும் வகையில் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் இம்பேக்ட் பிளேயராக அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், அபிஷேக் சர்மா இன்று தனது 100ஆவது டி20 போட்டியில் விளையாடினார். தொடக்கம் முதலே ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில், ஹெட் 16 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். இதில், 6 பவுண்டரி, 4 சிக்ஸர் அடங்கும். மேலும், இந்த சீசனில் 2ஆவது முறையாக 16 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். ஒரு முறை 18 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். பவர்பிளேயில் 2ஆவது முறையாக 100 ரன்கள் குவித்துள்ளது. இந்தப் போட்டியில் 6 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 107/0 ரன்கள் எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக டெல்லிக்கு எதிராக பவர்பிளேயில் 125/0 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டிராவிஸ் ஹெட்டைத் தொடர்ந்து அபிஷேக் சர்மா 19 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். கடைசியில் இருவரும் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9.4 ஓவர்களிலேயே 167 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 75 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 8 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 89 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து வரலாற்று சாதனையை கேப்டன் கம்மின்ஸூக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் 7 வெற்றிகளுடன் 3ஆவது இடத்திற்கு முன்னேறியது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடம் பிடித்துள்ளது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணியானது முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.

  • திருப்பூரில் அதிகரிக்கும் விபச்சாரம்.. ரெய்டு விட்ட போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய அழகிகள்..
    on May 8, 2024 at 6:09 pm

    திருப்பூரில் பிணலாடை நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய நபர்களை குறிவைத்து பல்வேறு தனியார் தங்கும் விடுதிகளில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக மாநகர காவல் துறைக்கு ரகசிய தகவல் வந்ததை எடுத்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வந்த குரலகம் என்ற தனியார் தங்கும் விடுதியை தெற்கு காவல் ஆய்வாளர்.கணேஷ் குமார் தலைமையில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் சென்னை ஆவடியை சேர்ந்த பெண்ணை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து தனியார் தங்கும் விடுதியில் மேலாளராக பணியாற்றி வந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் என்பவரையும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பவரையும் திருப்பூர் தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர் மேலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்த பெண்ணை மீட்டு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் தொடர்ந்து பொதுமக்களுக்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் விதமாக விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்கள் மீதும் திருப்பூர் மாநகர காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

  • சவுக்கு சங்கருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.. நீதிமன்றம் உத்தரவு – சவுக்கு சங்கர் வழக்கறிஞர் பேட்டி..
    on May 8, 2024 at 5:58 pm

    யூ டுயூபர் சவுக்கு சங்கர்,பெண் போலீஸ் அதிகாரியை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மத்திய சிறையில் தாக்கப்பட்டதாக சவுக்கு சங்கரின் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அதன் அடிப்படையில் சட்டப்பணிகள் குழுவினர் சிறைக்குள் சென்று பரிசோதனை மேற்கொண்டனர். இது குறித்து சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,சிறைக்குள் சவுக்கு சங்கர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டக் பணிகள் குழு ஆய்வுக்கு பின்பு சவுக்கு சங்கருக்கு கோவை அரசு மருத்துவமனையில் வைத்தும், உடலில்  உள்ள காயங்களை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவுக்கான அறிக்கை நாளை காலை கிடைத்து விடும். அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென மனு அளித்திருந்தோம் அதற்கான உத்தரவு கிடைத்துள்ளது.எதற்காக போராடினமோ?? அதற்கு வெற்றி கிடைத்துள்ளது.சிகிச்சை அளிப்பதற்கான உத்தரவு சிறைத்துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சிறையில் காவலர்கள் தாக்கப்பட்டு வலது கையில் முறிவு ஏற்பட்டு உள்ளது.தாராபுரத்தில் விபத்து ஏற்பட்ட முதல் உதவி செய்ததும் , எந்த இடத்தில் காயங்கள் பட்டது என அதற்கான அறிக்கையை நம்ம பெற்றுள்ளோம்.சிறைக்குச் செல்வதற்கு முன்பு இடது கையில் காயங்கள் ஏற்பட்டு அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சிறைக்குச் சென்ற பின்பு வலது கையில் அவருக்கு அடிபட்டுள்ளது.அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம்.  மூன்று நாட்களாக இதை நாம் வலியுறுத்தி வருகிறோம். இப்போது அதற்கான உத்தரவு கிடைத்துள்ளது. யூ டியுபர் மாரிதாஸ் தவறான கருத்தை பதிவு செய்துள்ளார். ஒரு கட்சியைச் ( அதிமுக )  சார்ந்து இருப்பது தவறு கிடையாது. என்னுடைய தந்தை தவறியதால் அதற்காக நான் மொட்டை அடித்து உள்ளேன். அது தெரியாமல் அவர் பேசி உள்ளார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தவறு செய்தவர்களுக்கு ஆதரவாக ஆஜர் ஆனேன் என தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.அது கிடையாது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக தான் நான் வாதாடினேன்.சமூக வலைதளங்களில் அரசியல் சார்ந்து தவறான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். நீதிபதி முன்பு சவுக்கு சங்கருக்கு கோவை சிறையில் நடந்த சம்பவம் அனைத்தும் வாக்குமூலமாக மதுரையில் கொடுத்துள்ளார். சவுக்கு சங்கர் உடலில் உள்ள காயங்கள் குறித்தான  தகவல்கள் சட்டக் பணிகள் குழு அறிக்கையில் உள்ளது.அதற்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் தகவல்களும், அதற்கு மருத்துவர் பதில் அளிக்காத தகவல்களும் அந்த அறிக்கையில் உள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் வைத்துள்ளோம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான கட்டணத்தையும் அவர்கள் செலுத்திக் கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளோம்..ஆனால் இந்த வழக்கில் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சைக்காக சவுக்கு சங்கரை அனுமதிப்பார்கள். அங்கு அவருக்கு நல்ல சிகிச்சை கிடைக்கும் என நம்புகிறோம். அப்படி அங்கு கிடைக்காவிட்டால் அதற்கு எதிராகவும் சட்டப்படி போராடுவோம் என தெரிவித்தார்.

  • Sangeeth Sivan Death: பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர்… இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார்!
    on May 8, 2024 at 5:53 pm

    பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் உடன் பிறந்த சகோதரரும், மலையாள பட இயக்குனருமான சங்கீத் சிவன் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   சங்கீத் சிவன், 1959 ஆம் ஆண்டு பிரபல ஸ்டில் புகைப்படக் கலைஞரும், ஒளிப்பதிவாளருமான சிவனுக்கு மூத்த மகனாகப் பிறந்தார். எம்ஜி கல்லூரி மற்றும் மார் இவானியோஸ் கல்லூரிகளில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, தனது தந்தையுடன் ஆவணப்படங்களில் பணியாற்ற துவங்கினார். இதுவே இவர் இயக்குனராக மாறுவதற்கான தூண்டுதலாக அமைந்தது.   சங்கீத் சிவனுக்கு ஆரம்ப காலத்தில், தலைசிறந்த விஷயங்களை ஆவணப்படமாக மாற்றுவதில் தான் அதிக ஆர்வம் இருந்தது. யுனிசெஃப் மற்றும் திரைப்படப் பிரிவுக்காக பல ஆவணப்படங்களைத் இவர் இயக்கினார். பின்னர் பிரபல ஒளிப்பதிவாளராக இருக்கும் இவரின் சகோதரர் சந்தோஷ் சிவனின் தூண்டுதலின் பேரில், திரைப்படங்கள் எடுக்க முடிவு செய்தார். Raai Laxmi: 35-ஆவது பிறந்தநாளை குதூகலமாக கொண்டாடிய ராய் லட்சுமி! ரசிகர்களுக்கு வைத்த கவர்ச்சி ட்ரீட் இதோ! அதன்படி 1990-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘வியூகம்’ என்கிற மலையாள படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இது ஒரு போலீஸ் கிரைம் திரில்லர் ஸ்டோரியாக இருந்ததால்… இவரின் படைப்பு தனித்துவமாக பார்க்கப்பட்டது. முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக மாறியதை தொடர்ந்து, மலையாள முன்னணி நடிகர்களான மோகன் லாலை வைத்து ‘யோதா’ என்கிற படத்தை இயக்கினார். அடுத்தடுத்து பல மலையாள படங்களை இயக்கியுள்ள இவர், 5க்கும் மேற்பட்ட இந்தி படங்களையும் இயக்கியுள்ளார்.   அதே போல் ஹிந்தி மற்றும் மலையாளத்தில் சில படங்களை தயாரித்தும் உள்ளார் சங்கீத் சிவன். இந்நிலையில் 65 வயதாகும் சங்கீத் சிவன் உடல்நல குறைவு காரணமாக மும்பையில் உள்ள கோகிலா பென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  Aruvi Serial Warped: முடிவுக்கு வந்தது சன் டிவி தொடர் ‘அருவி’! கடைசி நாளில் பிரபலங்கள் எடுத்து கொண்ட போட்டோஸ்!

  • Mobile Users Alert : Xiaomi, Redmi, Poco.. மொபைல் வைத்திருப்பவரா நீங்கள்? உஷாரா இருங்க மக்களே..
    on May 8, 2024 at 5:46 pm

    சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் Xiaomi, Redmi மற்றும் Poco ஸ்மார்ட்போன்களில் சுமார் 20 முக்கியமான பாதிப்புகளை கட்டவிழ்த்துள்ளனர். புதிய ஆபத்தான வைரஸ் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்த ஹேக்கர்களுக்கு அணுகலை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. ஏப்ரல் 25 முதல் ஏப்ரல் 30 வரையிலான ஐந்து நாட்களுக்குள், பாதிக்கப்பட்ட சாதனங்களின் பல்வேறு பயன்பாடுகள் மற்றும் சிஸ்டம் கோப்புகளில் இந்த பாதிப்புகள் கண்டறியப்பட்டன. Xiaomi மற்றும் பிற சாதனங்களில் சமீபத்தில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தாக்குதல்கள் ஓவர்செக்யூர்டு மூலம் வெளியிடப்பட்ட வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளன. வலைப்பதிவின் படி, Xiaomi, Redmi மற்றும் Poco கைபேசிகளில் பயன்படுத்தப்படும் MIUI மற்றும் HyperOS இல் இந்த சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், Xiaomi அதன் தனிப்பயன் இயக்க முறைமை MIUI ஐ ஆண்ட்ராய்டு 14 OS ஐ ஆதரிக்கும் HyperOS க்கு மறுபெயரிட்டது. அறிக்கையின்படி, சியோமியின் ஓப்பன் சோர்ஸ் ப்ராஜெக்ட் ஆப்ஸில் (ஏஓஎஸ்பி) இந்த பிரச்சனைக்குரிய சில குறைபாடுகள் காணப்படுகின்றன, அவை சரிசெய்யப்பட வேண்டும். இந்த பாதுகாப்பு குறைபாடுகள் குறிப்பாக Xiaomi சாதனங்களில் இருக்கும் இந்த ஆப்ஸை ஒட்டும் பணியில் கண்டறியப்பட்டுள்ளன. Xiaomi, Redmi மற்றும் Poco சாதனங்களில் உள்ள இந்த பயன்பாடுகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன: தொகுப்பு (com.miui.gallery) GetApps (com.xiaomi.mipicks) Mi வீடியோ (com.miui.videoplayer) MIUI புளூடூத் (com.xiaomi.bluetooth) தொலைபேசி சேவைகள் (com.android.phone) பிரிண்ட் ஸ்பூலர் (com.android.printspooler) பாதுகாப்பு (com.miui.securitycenter) பாதுகாப்பு மைய கூறு (com.miui.securitycore) அமைப்புகள் (com.android.settings) ShareMe (com.xiaomi.midrop) சிஸ்டம் டிரேசிங் (com.android.traceur) Xiaomi Cloud (com.miui.cloudservice) இருப்பினும், குறைபாடுகள் கண்டறியப்படாத குறிப்பிட்ட அமைப்பு எதுவும் இல்லை. ஆனால் இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து Xiaomi இதுவரை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. இந்த அப்ளிகேஷன்களில் வைரஸ்கள் கண்டறியப்பட்டு, வலைப்பதிவில் விரிவாகக் காட்டப்பட்டுள்ளன. Xiaomi, Poco மற்றும் Redmi சாதனங்களில் இந்த வைரஸ்களை எதிர்த்துப் போராட, சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் இந்த சிக்கல்களைச் சரிசெய்வதற்கான புதுப்பிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?

  • ஐபிஎல் வரலாற்றில் எப்போதும் இல்லாத ரன் சேஸ் – ஹெட், அபிஷேக் சரவெடியால் 9.4 ஓவர்களில் SRH வெற்றி பெற்று சாதனை!
    on May 8, 2024 at 5:18 pm

    லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 57ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9.4 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 57ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். அதன் படி முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. குயீண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. பிறந்தநாள் ஹீரோவான பேட் கம்மின்ஸ் வீசிய 2ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர் உள்பட 10 ரன்கள் மட்டும் எடுக்கப்பட்டது. மீண்டும் 3ஆவது வீசிய புவனேஷ்வர் குமாரின் முதல் பந்திலேயே டி காக் 2 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இந்த சீசனில் தொடர்ந்து அவர் மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வந்துள்ளார். இந்த ஓவரில் புவனேஷ்வர் குமார் 2 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். 4ஆவது ஓவரை ஷாபாஸ் அகமது வீசினார். இந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. புவனேஷ்வர் குமார் வீசிய 5ஆவது ஓவரில் முதல் பந்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. இதன் மூலமாக இந்த சீசனில் பவர்பிளேயில் மட்டும் புவனேஷ்வர் குமார் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். டெல்லி வீரர் கலீல் அகமது 8 விக்கெட்டும், கேகேஆர் வீரர் வைபவ் அரோரா 7 விக்கெட்டும், ராஜஸ்தான் வீரர் டிரெண்ட் போல்ட் 7 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர். இறுதியாக லக்னோ பவர்பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்துள்ளது. இந்த சீசனில் பவர்பிளேயில் குறைவான ரன்கள் எடுத்த 2ஆவது அணியாக லக்னோ மோசமான சாதனை படைத்துள்ளது. அதோடு, பவர்பிளேயில் ஒரு பவுண்டரி கூட அடிக்காத மற்றொரு மோசமான சாதனையையும் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பவர்பிளேயில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 2 சிக்ஸர்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்த முதல் அணியாக சரித்திரம் படைத்தது. தற்போது 2ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது அணியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மோசமான அணியாக சரித்திரம் படைத்துள்ளது. ஜெயதேவ் உனத்கட் வீசிய 8ஆவது ஓவரில் குர்ணல் பாண்டியா அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசியதன் மூலமாக இந்த சீசனில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. அதோடு, குறைந்த பந்துகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட சீசனாக இந்த சீசன் புதிய சாதனை படைத்துள்ளது. 13,079 பந்துகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுகளில் 16,269 பந்துகளிலும், 2023 ஆம் ஆண்டுகளில் 15,390 பந்துகளிளும் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 2022 ஆம் ஆண்டு 1062 சிக்ஸர்களும், 2023 ஆம் ஆண்டு 1124 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கேஎல் ராகுல் 29 ரன்னிலும், குர்ணல் பாண்டியா 24 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இறுதியாக நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயூஷ் பதோனி இருவரும் அதிரடியாக விளையாடவே லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது. இதில், ஆயூஷ் பதோனி 30 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 55 ரன்களுடனும், நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 48 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பவுலிங்கை பொறுத்த வரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும், பேட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் எளிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பேட் கம்மின்ஸ் இன்று தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு டிரீட் கொடுக்கும் வகையில் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் இம்பேக்ட் பிளேயராக அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், அபிஷேக் சர்மா இன்று தனது 100ஆவது டி20 போட்டியில் விளையாடினார். தொடக்கம் முதலே ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில், ஹெட் 16 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். இதில், 6 பவுண்டரி, 4 சிக்ஸர் அடங்கும். மேலும், இந்த சீசனில் 2ஆவது முறையாக 16 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். ஒரு முறை 18 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். பவர்பிளேயில் 2ஆவது முறையாக 100 ரன்கள் குவித்துள்ளது. இந்தப் போட்டியில் 6 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 107/0 ரன்கள் எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக டெல்லிக்கு எதிராக பவர்பிளேயில் 125/0 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டிராவிஸ் ஹெட்டைத் தொடர்ந்து அபிஷேக் சர்மா 19 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். கடைசியில் இருவரும் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9.4 ஓவர்களிலேயே 167 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 75 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 8 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 89 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் 7 வெற்றிகளுடன் 3ஆவது இடத்திற்கு முன்னேறியது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடம் பிடித்துள்ளது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணியானது முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.

  • Raai Laxmi: 35-ஆவது பிறந்தநாளை குதூகலமாக கொண்டாடிய ராய் லட்சுமி! ரசிகர்களுக்கு வைத்த கவர்ச்சி ட்ரீட் இதோ!
    on May 8, 2024 at 5:15 pm

    நடிகை ராய் லட்சுமி மே 5-ஆம் தேதி தன்னுடைய 35-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், தற்போது தன்னுடைய பிறந்தநாள் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.   உயரத்தில் அனுஷ்காவையும், கலரில் தமன்னாவையும் சேர்ந்து செதுக்கிய சிலை போல் இருக்கும் நடிகை ராய் லட்சுமி, பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூரில் தான். படித்துக் கொண்டிருக்கும் போதே நடிக்க வேண்டும் என முடிவு செய்து, மாடலிங் துறையில் கால்பதித்த இவர் பின்னர் ஒருவழியாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதன்படி 2005-ஆம் ஆண்டு, தளபதி விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான ‘கற்க கசடற’ திரைப்படம் தான் ராய் லட்சுமிக்கும் முதல் படமாக அமைந்தது. இதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் என அடுத்தடுத்து தென்னிந்திய மொழிகளில் பிஸியானார். ஆனால் அறிமுகமான ஒரே வருடத்திலேயே தமிழில் இரண்டு படங்களிலும், கன்னடம் மற்றும் தெலுங்கில் ஒரு படம் என படு பிஸியான ஹீரோயினாக மாறினார். Aruvi Serial Warped: முடிவுக்கு வந்தது சன் டிவி தொடர் ‘அருவி’! கடைசி நாளில் பிரபலங்கள் எடுத்து கொண்ட போட்டோஸ்! இதை தொடர்ந்து மற்ற தென்னிந்திய மொழிகளில் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது சில தமிழ் படங்களிலும் நடித்தார். இவர் நடித்த ஒரு சில படங்கள் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்த போதிலும்… பல படங்கள் ராய் லட்சுமிக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. தன்னுடைய கவர்ச்சியை கட்டவிழ்த்த விட்டபோதும் இவரால் தற்போது வரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்கமுடியவில்லை என்பதே உண்மை. தென்னிந்திய மொழிகளை கடந்து, பாலிவுட் திரையுலகிலும் நடிக்க துவங்கிய ராய் லட்சுமி…. ஜூலி படத்திற்காக அரை நிர்வாணமாக நடித்து அதிரவைத்தார். மேலும் கடந்த சில மாதங்களாக முதுகு தண்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக எந்த படங்களிலும் இவர் கமிட் ஆகவில்லை. Ashna Zaveri: ஆத்தி கழண்டு விழுந்துட போகுது! உள்ளாடை போடாமல்.. கவர்ச்சியில் எல்லை தாண்டிய ஆஷ்னா சவேரி! கிளிக் இந்நிலையில் மே 5-ஆம் தேதி தன்னுடைய 35-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ராய் லட்சுமி… ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி ட்ரீட் வைக்கும் விதமாக வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

  • சோனியா, ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்.. சாம் பிட்ரோடா விவகாரத்தில் வானதி சீனிவாசன் ஓபன் டாக்..
    on May 8, 2024 at 4:54 pm

    கோவை தெற்கு எம்.எல்.ஏவும், பாஜகவை சேர்ந்தவருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் குடும்பத்தினருக்கு மிகமிக நெருக்கமானவரும், காங்கிரஸ் அயலக பிரிவின் தலைவருமான சாம் பிட்ரோடா, ‘தி ஸ்டேஸ்மேன்’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவின் கிழக்கு பகுதியில்  உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போலவும் தோற்றமளிக்கின்றனர்” என்று கூறியுள்ளார். இது 140 கோடி இந்தியர்களை நிறத்தின் அடிப்படையில் இழிவுப்படுத்தும் நிறவெறிச் செயல். சாம் பிட்ரோடா சாதாரண நபர் அல்ல. ராஜிவ் காந்தி காலத்திலிருந்து சோனியா குடும்பத்திலும், காங்கிரஸ் கட்சியிலும் ஆதிக்கம் செலுத்துபவர். எப்போதெல்லாம் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறதோ அப்போதெல்லாம் அதிகாரமிக்க பொறுப்புகளில் நியமிக்கப்பட்டவர். எனவே, அவரது கருத்தை சோனியா, ராகுல் மற்றும் காங்கிரஸின் கருத்தாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். எனவே, காங்கிரஸ் சார்பில், ‘கட்சிக்கு தொடர்பில்லை’ என பெயரளவுக்கு ஓர் அறிக்கை விட்டு தப்பிக்க முடியாது.  சாம் பிட்ரோடா கருத்துக்கு சோனியா, ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘பாரத ஒற்றுமை’ என்ற பெயரில் காங்கிரஸ் இளவரசர் ராகுல் நாடெங்கும் யாத்திரை மேற்கொண்டார். ஆனால், வடக்கு, தெற்கு என்றும், மொழி, இனம் அடிப்படையிலும் நாட்டை கூறுப்போடும் வகையில், ராகுல் உள்ளிட்டோர் தொடர்ந்து பேசி வருகின்றனர். ‘இந்தியா ஒரே நாடல்ல’ என்ற திராவிடர் கழகத்தின் கொள்கையை இப்போது ராகுல் முழங்கி வருகிறார். காங்கிரஸின், ராகுலின் பிரிவினை சிந்தனையின் தொடர்ச்சியாக, நிறத்தின் அடிப்படையில் இந்தியர்களிடம் பிரிவினையை ஏற்படுத்த சாம் பிட்ரோடா முயற்சித்துள்ளார்.  நம் தாய்மண்ணின் மகத்துவத்தை உணராமல், காலனியாதிக்கத்தின்  பிடியில் உழன்று கொண்டிருக்கும், காங்கிரஸின் சிந்தனையைதான் சாம் பிட்ரோடா பிரதிபலித்துள்ளார். நமது மண்ணின் மைந்தர்களை தோலின் நிறம் கொண்டு வேறுபடுத்தியதோடு, ஒரு படி சென்று, இந்தியர்களை வேறு நாட்டினராய் அடையாளப்படுத்தி உள்ளார்.  நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்கிறார். மறுபுறம், எதிர்க்கட்சியான காங்கிரஸ் நிறத்தின் வாயிலாய் நம்மை இந்தியர் அல்லாதவர் என இழிவுபடுத்துகிறது. இதே சாம் பிட்ரோடா தான் சில வாரங்களுக்கு முன்பு, “பரம்பரை சொத்தில் 55 சதவீதம் அரசுக்கு அளிக்கப்பட வேண்டும்” என்று,  மக்களின் சேமிப்பை சுரண்ட எண்ணியவர். வழக்கம்போல இது சாம் பிட்ரோடாவின் தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ்  விலகிக்கொள்ள முயற்சித்தாலும், மக்களின் ஒற்றுமையை பிளவுபடுத்தும் காங்கிரஸின் அடிப்படை சித்தாந்தம் அவர்களின் செயல்பாடுகள் மூலம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. 2000 வருடங்களுக்கு முன்பு நிறத்தின் அடிப்படையில் நம்மை அந்நிய சக்திகளான ஆங்கிலேயர் நம்மை இழிவுபடுத்தினர், பின் அடிமைப்படுத்தினர். இன்றைய நவீன விஞ்ஞான உலகிலும் காங்கிரஸ் அதே வழியைப் பின்பற்றி நிறத்தின் வாயிலாய் நம்மை பிரித்து ஆட்சி கட்டிலில் அமர துடிக்கிறது. மக்களை பிளவுபடுத்தி இழிவுபடுத்தும் ‘இண்டி’ கூட்டணியினருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும்  நான் தெளிவுபடுத்த விரும்புவது என்னவென்றால், “ஆம்,  நாட்டின் தென் பகுதியில் இருப்பவராகிய நாங்கள் கருப்பு நிறமுடையவர்கள் தான். ஆனால் என்றும் பெருமைமிகு இந்தியர்கள். எங்களை அந்நியப்படுத்த முயற்சிக்கும் தங்களை போன்றோருக்கு எங்களின் வலிமையை ஜூன் நான்காம் தேதி புரிய வைப்போம்” நிறத்தின் அடிப்படையில் இந்தியரை இழிவுபடுத்தும், புள்ளிகளை தங்கள் பெயரில் கொண்டிருக்கும் கூட்டணிக்கு மக்கள் விரைவில்  முற்றுப்புள்ளி வைப்பார்கள்” என்று கூறியுள்ளார். விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?

  • மகிழ்ச்சியான, ஆரோக்கியமான திருமண உறவுக்கு உதவும் டிப்ஸ் இதோ.. கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..
    on May 8, 2024 at 4:38 pm

    நீடித்த உறவை அடைய சில வழிகள் உள்ளன. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். உங்கள் துணையுடன் ஆரோக்கியமான மற்றும் நீடித்த காதல் உறவை வைத்திருப்பது முக்கியம். மற்ற எல்லா உறவுகளையும் போலவே, இந்த உறவுக்கு முயற்சி மற்றும் வளர்ப்பு தேவை. சரியான தொடர்பு, நம்பிக்கை மற்றும் மரியாதை தவிர, நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதையும், உறவில் பாதுகாப்பாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்ய நீங்கள் வேலை செய்ய வேண்டிய மற்ற சில விஷயங்கள் உள்ளன. நீடித்த உறவை அடைய சில வழிகள் உள்ளன. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். எந்தவொரு உறவிலும், நீங்கள் சில எல்லைகளை நிறுவ வேண்டும். அந்த வகையில் திருமண உறவிலும் எல்லைகளை நிறுவுவது முக்கியம். அடுத்த கட்டம் இந்த எல்லைகளை மதித்து பராமரிப்பதாகும். இது உறவைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் தம்பதியினரிடையே பிணைப்பை வலுப்படுத்துகிறது. இது சுயமரியாதையை மேம்படுத்தவும் உதவுகிறது. ஒரு உறவில் இருக்கும்போது, ​​ஒருவருக்கொருவர் ஆதரவு கொடுப்பது முக்கியம். ஒருவரையொருவர் ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும், உதவுவதும் வலுவான பிணைப்பை வளர்க்க உதவும். இது தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு உதவும் மற்றும் உறவை வளர்க்கவும் உதவும். நீங்கள் இருவரும் செய்ய விரும்பும் செயல்பாடுகள் அல்லது விஷயங்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும், பின்னர் அதை ஒன்றாகச் செய்யவும். இது நீங்கள் ஒருவரையொருவர் ஈடுபாட்டுடன் இருக்கவும், ஒருவருடன் ஒருவர் நேரம் செலவிடுவதை அனுபவிக்கவும் உதவும். ஒரு செயலைச் செய்வது ஒரு வலுவான தொடர்பை உருவாக்கி, பிணைப்பை ஆழப்படுத்தும். நீங்கள் ஒருவருக்கொருவர் சிறந்த தோழர்களாக மாறுவீர்கள். பொதுவாக, தம்பதிகள் துருவங்கள் என்று அறியப்படுகிறது. ஒருவர் வெட்கப்படுபவர் என்றால், மற்றொருவர் பொதுவாக ஒரு வெளிப்படையாக இருப்பார். ஒரே மாதிரியான மதிப்பு மற்றும் நம்பிக்கை அமைப்பு இருப்பது முக்கியம், அது மோதல்களின் வாய்ப்புகளை குறைக்கும். இதேபோன்ற நம்பிக்கை அமைப்பு ஒருவருக்கொருவர் அன்பையும் ஆதரவையும் அதிகரிக்கும். வாழ்க்கையில் எல்லாமே திட்டமிட்டபடி நடக்காது. உயர்வு மற்றும் தாழ்வுகளின் போது, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது முக்கியம். நீங்கள் இருவரும் ஒரு சூழ்நிலையை விரைவாக மாற்றியமைக்க முடிந்தால், நீங்கள் குறைவான சிரமங்களை எதிர்கொள்வீர்கள் மற்றும் சவாலான நேரங்களை சமாளிப்பது எளிதாகிவிடும். வெவ்வேறு ஜோடிகளுக்கு கடினமான உரையாடல்களின் கீழ் வரும் பல்வேறு தலைப்புகள் இருக்கலாம். அந்த தலைப்புகளைத் தவிர்ப்பது உங்களுக்கு எந்தப் பயனையும் தராது. கடினமான உரையாடலை விட்டு ஓடுவதற்குப் பதிலாகத் தயாராக இருப்பது நல்லது. மோதலில் ஈடுபடாதவராக இருப்பது தடைகளை உருவாக்கும் மற்றும் நீண்ட கால பிரச்சினைகளை ஏற்படுத்தும். அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் சரி, சங்கடமாக இருந்தாலும் சரி, அதைப் பற்றி பேசவும், விவாதிக்கவும். ஒரு காதல் உறவில், காதல் முக்கியமானது. ஆனால், அதைத் தவிர நட்புதான் முக்கியம். முதலில் ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருங்கள். ஆதரவையும் கவனிப்பையும் வழங்குங்கள். ஒருவரையொருவர் நன்கு அறிந்து, நண்பர்களைப் போல அதிக நேரம் செலவிடுங்கள். இது காதல் நீண்ட காலம் நீடிக்க உதவுகிறது. ஒருவருக்கொருவர் முன்னுரிமையாக இருங்கள். நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உங்கள் துணை உங்களுக்கு முக்கியமானவர் என்று உணருங்கள். சில தரமான நேரத்தை செலவிடுவதன் மூலம் அவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். நீங்கள் பிஸியாக இருந்தாலும் அல்லது வேலையில் மூழ்கியிருந்தாலும் அவர்களின் உரைகள் அல்லது அழைப்புகளுக்குப் பதிலளிக்கவும். ஒருவரையொருவர் சந்திக்க நேரம் ஒதுக்குங்கள்.

  • Aruvi Serial Warped: முடிவுக்கு வந்தது சன் டிவி தொடர் ‘அருவி’! கடைசி நாளில் பிரபலங்கள் எடுத்து கொண்ட போட்டோஸ்!
    on May 8, 2024 at 4:26 pm

    ‘அருவி’ சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது, பிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடி எடுத்து கொண்ட போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.   சன் டிவி தொலைக்காட்சியில் கடந்த 3 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த சூப்பர் ஹிட் தொடரான ‘அருவி’ தொடர், இந்த வாரத்துடன் முடிவுக்கு வர உள்ளது. இன்று இந்த சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு நடந்த நிலையில் சீரியல் குழுவினர் ஒன்று எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சேரியல்களுக்குமே தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பகை, குடும்ப செண்டிமெண்ட், பாச பிணைப்பு என அனைத்தும் ஒன்று சேர்ந்த தொடராக ‘அருவி’ சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. Ashna Zaveri: ஆத்தி கழண்டு விழுந்துட போகுது! உள்ளாடை போடாமல்.. கவர்ச்சியில் எல்லை தாண்டிய ஆஷ்னா சவேரி! கிளிக் 2021-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல், கன்னட மொழித் தொடரான ‘கஸ்தூரி நிவாசா’ என்ற தொடரின் கதைக்கருவை மையமாக வைத்து ரீமேக் செய்யப்பட்ட தொடர் ஆகும். இந்த தொடரில் கதாநாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மூத்த மேலான ஜோவிதா நடித்து வந்தார். ஹீரோவாக கார்த்திக் வாசு நடிக்க, முக்கிய வேடத்தில் அம்பிகா, ஈஸ்வர் ரகுநாதன், லாவண்யா, கிருத்திகா, உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வந்தனர். நானாக விலகவில்லை! பிரியங்கா நல்காரி கதையை ஒரேயடியாக முடித்து வீட்டுக்கு அனுப்பிய ஜீ தமிழ்! அவரே போட்ட பதிவு! கடந்த 3 வருடங்களாக விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல்…  இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது.  ஏற்கனவே இதுகுறித்த தகவலைகள் வெளியான நிலையில், இன்று இந்த சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது, அப்போது சீரியல் குழுவினர் அனைவரும் ஒன்று கூடி எடுத்து கொண்ட போட்டோசை சீரியல் நடிகை திவ்யா கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். Shaalin Zoya: பிச்சைக்கார நாயே.. பொறுக்கி என கோமாளியை அசிங்கமாக திட்டி சர்ச்சையில் சிக்கிய TTF வாசனின் காதலி! சீரியல் நடிகர்கள் மட்டும் இன்று, இயக்குனர், டெக்னீஷியன்ஸ் என அனைவருமே இதில் இடம்பெற்றுள்ளனர். கடைசி நாள் என்பதால் மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும், சிரித்த முகத்துடன் ஒருவருக்கொருவர் பிரியாவிடை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.                                                                                                       

  • தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
    on May 8, 2024 at 4:19 pm

    உடலின் நீரேற்றம் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நாளைக்கு சுமார் 8-10 கிளாஸ் தண்ணீரை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். போதுமான நீரேற்றம் என்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது சிறந்த செயல்பாடு மற்றும் பராமரிப்பை ஊக்குவிக்கும் உடலின் அடிப்படைத் தேவை நீர். நீரேற்றமாக இருப்பது ஒரு நபர் தனது உடலுக்கு செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்றாகும். உடலின் நீரேற்றம் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நாளைக்கு சுமார் 8-10 கிளாஸ் தண்ணீரை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நீரேற்றமாக இருப்பது உடல் செயல்திறனை ஆதரிக்கவும், தலைவலி மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கவும், நல்வாழ்வை மேம்படுத்தவும் நீர் செயல்படுகிறது. எனவே, ஆரோக்கியமான உடலைப் பராமரிக்க, போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். உடல் செயல்திறனை அதிகரிக்கிறது நீரேற்றம் ஒரு நபரின் உடல் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது, குறிப்பாக கடுமையான வெப்பம் அல்லது அதிக வெப்பநிலையின் போது ஆற்றல் அதிகரிக்க உதவுகிறது. நீரிழப்பு உடல் வெப்பநிலை கட்டுப்பாட்டை மாற்றியமைக்கும், குறைக்கப்பட்ட உந்துதல் மற்றும் அதிகரித்த சோர்வுக்கு வழிவகுக்கும். இது உடற்பயிற்சியை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் கடினமாக உணர வைக்கும். மலச்சிக்கலை போக்கும் குடல் இயக்கங்கள் மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான அமைப்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சிகிச்சை நெறிமுறையின் ஒரு பகுதியாக அடிக்கடி திரவ உட்கொள்ளலை அதிகரிக்க பரிந்துரைக்கப்படுகிறது. நிறைய தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலைத் தடுக்கவும், நிவாரணம் பெறவும் உதவும்,  மது அருந்துவதன் அறிகுறிகள் ஹேங்ஓவர் என்று குறிப்பிடப்படுகின்றன. ஹேங்ஓவர்கள் ஓரளவு நீரிழப்பு காரணமாக ஏற்படுகிறது, மேலும் தண்ணீர் குடிப்பது ஹேங்கொவரின் சில முக்கிய அறிகுறிகளைக் குறைக்க உதவும். பானங்களுக்கு இடையில் ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடிப்பதும், படுக்கைக்குச் செல்வதற்கு முன் குறைந்தபட்சம் ஒரு கிளாஸ் தண்ணீரையாவது குடிப்பதும் ஹேங்கொவரைக் குறைப்பதற்கான சிறந்த வழியாகும்.   போதுமான நீரேற்றம் எடை இழப்புக்கு உதவும். அதிக எடை கொண்ட 50 இளம் பெண்களிடம் 2013 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 8 வாரங்களுக்கு உணவுக்கு முன் ஒரு நாளைக்கு 3 முறை கூடுதலாக 16.9 அவுன்ஸ் (500 மிலி) தண்ணீர் குடிப்பதால், அவர்களின் ஆய்வுக்கு முந்தைய அளவீடுகளுடன் ஒப்பிடும்போது உடல் எடை மற்றும் உடல் கொழுப்பில் குறிப்பிடத்தக்க குறைப்பு ஏற்பட்டது.

  • 2 ஆண்டுகளுக்கு பிறகு 2 ஆவது அணியாக மோசமான சாதனை – ஒரு பவுண்டரி கூட இல்ல, ஒரு சிக்ஸர்!
    on May 8, 2024 at 4:15 pm

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 57ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது பவர்பிளேயில் ஒரு பவுண்டரி கூட அடிக்காத 2அவது அணியாக மோசமான சாதனை படைத்துள்ளது. ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 57ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி குயீண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. பிறந்தநாள் ஹீரோவான பேட் கம்மின்ஸ் வீசிய 2ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர் உள்பட 10 ரன்கள் மட்டும் எடுக்கப்பட்டது. மீண்டும் 3ஆவது வீசிய புவனேஷ்வர் குமாரின் முதல் பந்திலேயே டி காக் 2 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இந்த சீசனில் தொடர்ந்து அவர் மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வந்துள்ளார். இந்த ஓவரில் புவனேஷ்வர் குமார் 2 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். 4ஆவது ஓவரை ஷாபாஸ் அகமது வீசினார். இந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. புவனேஷ்வர் குமார் வீசிய 5ஆவது ஓவரில் முதல் பந்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. இதன் மூலமாக இந்த சீசனில் பவர்பிளேயில் மட்டும் புவனேஷ்வர் குமார் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். டெல்லி வீரர் கலீல் அகமது 8 விக்கெட்டும், கேகேஆர் வீரர் வைபவ் அரோரா 7 விக்கெட்டும், ராஜஸ்தான் வீரர் டிரெண்ட் போல்ட் 7 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர். இறுதியாக லக்னோ பவர்பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்துள்ளது. இந்த சீசனில் பவர்பிளேயில் குறைவான ரன்கள் எடுத்த 2ஆவது அணியாக லக்னோ மோசமான சாதனை படைத்துள்ளது. அதோடு, பவர்பிளேயில் ஒரு பவுண்டரி கூட அடிக்காத மற்றொரு மோசமான சாதனையையும் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பவர்பிளேயில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 2 சிக்ஸர்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்த முதல் அணியாக சரித்திரம் படைத்தது. தற்போது 2ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது அணியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மோசமான அணியாக சரித்திரம் படைத்துள்ளது. ஜெயதேவ் உனத்கட் வீசிய 8ஆவது ஓவரில் குர்ணல் பாண்டியா அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசியதன் மூலமாக இந்த சீசனில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. அதோடு, குறைந்த பந்துகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட சீசனாக இந்த சீசன் புதிய சாதனை படைத்துள்ளது. 13,079 பந்துகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுகளில் 16,269 பந்துகளிலும், 2023 ஆம் ஆண்டுகளில் 15,390 பந்துகளிளும் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 2022 ஆம் ஆண்டு 1062 சிக்ஸர்களும், 2023 ஆம் ஆண்டு 1124 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கேஎல் ராகுல் 29 ரன்னிலும், குர்ணல் பாண்டியா 24 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இறுதியாக நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயூஷ் பதோனி இருவரும் அதிரடியாக விளையாடவே லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது. இதில், ஆயூஷ் பதோனி 30 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 55 ரன்களுடனும், நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 48 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பவுலிங்கை பொறுத்த வரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும், பேட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

  • அபாரமாக பந்து வீசிய ஹைதராபாத்: கடைசியில் கை கொடுத்த பதோனி, பூரன்: LSG 165 ரன்கள் குவிப்பு!
    on May 8, 2024 at 4:04 pm

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 57ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 57ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி குயீண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. பிறந்தநாள் ஹீரோவான பேட் கம்மின்ஸ் வீசிய 2ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர் உள்பட 10 ரன்கள் மட்டும் எடுக்கப்பட்டது. மீண்டும் 3ஆவது வீசிய புவனேஷ்வர் குமாரின் முதல் பந்திலேயே டி காக் 2 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இந்த சீசனில் தொடர்ந்து அவர் மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வந்துள்ளார். இந்த ஓவரில் புவனேஷ்வர் குமார் 2 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். 4ஆவது ஓவரை ஷாபாஸ் அகமது வீசினார். இந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. புவனேஷ்வர் குமார் வீசிய 5ஆவது ஓவரில் முதல் பந்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. இதன் மூலமாக இந்த சீசனில் பவர்பிளேயில் மட்டும் புவனேஷ்வர் குமார் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். டெல்லி வீரர் கலீல் அகமது 8 விக்கெட்டும், கேகேஆர் வீரர் வைபவ் அரோரா 7 விக்கெட்டும், ராஜஸ்தான் வீரர் டிரெண்ட் போல்ட் 7 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர். இறுதியாக லக்னோ பவர்பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்துள்ளது. இந்த சீசனில் பவர்பிளேயில் குறைவான ரன்கள் எடுத்த 2ஆவது அணியாக லக்னோ மோசமான சாதனை படைத்துள்ளது. அதோடு, பவர்பிளேயில் ஒரு பவுண்டரி கூட அடிக்காத மற்றொரு மோசமான சாதனையையும் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பவர்பிளேயில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 2 சிக்ஸர்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்த முதல் அணியாக சரித்திரம் படைத்தது. 1000 சிக்ஸர்கள்: தற்போது 2ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது அணியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மோசமான அணியாக சரித்திரம் படைத்துள்ளது. ஜெயதேவ் உனத்கட் வீசிய 8ஆவது ஓவரில் குர்ணல் பாண்டியா அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசியதன் மூலமாக இந்த சீசனில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. அதோடு, குறைந்த பந்துகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட சீசனாக இந்த சீசன் புதிய சாதனை படைத்துள்ளது. 13,079 பந்துகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுகளில் 16,269 பந்துகளிலும், 2023 ஆம் ஆண்டுகளில் 15,390 பந்துகளிளும் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 2022 ஆம் ஆண்டு 1062 சிக்ஸர்களும், 2023 ஆம் ஆண்டு 1124 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கேஎல் ராகுல் 29 ரன்னிலும், குர்ணல் பாண்டியா 24 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இறுதியாக நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயூஷ் பதோனி இருவரும் அதிரடியாக விளையாடவே லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது. இதில், ஆயூஷ் பதோனி 30 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 55 ரன்களுடனும், நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 48 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பவுலிங்கை பொறுத்த வரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும், பேட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் நிக்கோலஸ் பூரன் 5 பவுண்டரி அடித்ததன் மூலமாக 100 பவுண்டரி அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் தற்போது 101 பவுண்டரி விளாசியுள்ளார். இதே போன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா இன்று தனது 100ஆவது டி20 போட்டியில் விளையாடுகிறார். லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்: குயீண்டன் டி காக், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர், கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயூஷ் பதோனி, தீபக் கூடா, குர்ணல் பாண்டிய, கிருஷ்ணப்பா கௌதம், யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டிராவிஸ் ஹெட், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், ஷாபாஸ் அகமது, சன்வீர் சிங், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெயதேவ் உனத்கட், விஜயகாந்த் வியாஷ்காந்த், டி நடராஜன்.

  • Rasi Palan : இந்த 5 ராசிக்காரர்கள் பண விஷயத்தில் ரொம்பவே கஞ்சத்தனமானவர்கள்!
    on May 8, 2024 at 4:00 pm

    சிலர் எவ்வளவு சேமித்து வைத்தாலும் செலவு செய்வதற்கு முன் நூறு முறை யோசிப்பார்கள். ஜோதிடம் படி, இந்த ராசிக்காரர்கள் ரொம்பவே சிக்கனமானவர்கள். சிலர் பணத்தை தண்ணீர் போல செலவழிப்பார்கள். அவர்கள் பணத்தை செலவழிக்க ஒருபோதும் அதிகம் சிந்திக்க மாட்டார்கள். ஆனால், ஜோதிடம் படி சில ராசிக்காரர்கள் மிகவும் சிக்கனமானவர்கள். இந்த குணம் மற்றவர்களுக்கு எரிச்சலூட்டும்.  அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்களா.? என்பதை அறிய இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். ரிஷபம்: இந்த ராசிக்காரர்கள் முதலீடு செய்வதற்கு முன், விஷயங்களை நன்கு ஆராய்ந்து, நன்மை தீமைகளைப் பார்த்த பின்னரே பணத்தை செலவு செய்வார்கள். அதுமட்டுமின்றி, பிறருக்கு பணம் கொடுப்பதையும் வெறுக்கிறார்கள்.  மிதுனம்: இந்த ராசிக்காரர்கள் தங்கள் பணத்தை செலவழிக்க விரும்பமாட்டார்கள். ஆனால், நண்பர்கள் பணத்தை செலவழித்தால் அதை அனுபவிப்பார்கள். மேலும் இவர்கள் சேமிப்பை செலவழிக்கும் விஷயத்தில் மிகவும் புத்திசாலித்தனமாக இருப்பார்கள். கன்னி: இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் ரொம்பவே சிக்கனமாக இருப்பார்கள். அவர்கள் பண விஷயத்தில் எல்லாவற்றையும் கணக்கிடுகிறார்கள். மேலும், அவர்களின் பணம் எங்கே போனது என்று கண்காணிக்கிறார்கள்.  விருச்சிகம்: இந்த ராசிக்காரர்கள்  தங்கள் பணத்தை செலவழிக்க விரும்புவதில்லை. நண்பர்களுடன் வெளியில் சென்றால் செலவழிக்க தயங்குவார்கள். இவர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தைப் பூட்டிவிட்டு அதைத் தொடவே மாட்டார்கள்.   மகரம்: தேவையற்ற செலவினங்களில் இருந்து தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதில் இவர்கள் நல்ல முன்மாதிரிகள். மேலும், இவர்கள்  அதிக பணம் செலவழித்து தங்கள் அந்தஸ்தை எப்படி காட்டுகிறார்கள் என்று வெறுப்படைகிறார்கள்.

  • அழகிரி மகன் துரை தயாநிதி உடல்நிலை எப்படி இருக்கு? வேலூருக்கு ஓடோடி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
    on May 8, 2024 at 3:43 pm

    முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், அவருக்கு  திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும்,  இதையடுத்து அவர் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவப் பரிசோதனைகளில் அவருக்கு மூளை ரத்த நாளத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், அடுத்த சில நாட்களுக்கு அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். தனது அப்பாவுக்கும் சித்தப்பா ஸ்டாலினுக்கும் இடையே மனக்கசப்பு இருப்பினும் கூட, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறவினர்களோடு தொடர்ந்து நல்லுறவை பேணி வந்தவர் துரை தயாநிதி.  சமீபத்தில் மூளை ரத்த நாளத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டதால் மார்ச் மாதம் 14 ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் துரை தயாநிதி. இந்நிலையில், சிகிச்சையில் உள்ள துரை தயாநிதியை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது. விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?

  • Vani Bhojan : பச்சை நிறமே.. கிறங்க வைக்கும் பார்வையில்.. ரசிகர்களை குஷிப்படுத்திய நடிகை வாணி போஜன்..
    on May 8, 2024 at 3:22 pm

    சின்னத்திரையில் அறிமுகமாகி சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை வாணி போஜன் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி, தெய்வமகள் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரபல நடிகை வாணி போஜன். வாணி போஜன், ஓர் இரவு என்ற படத்தின் மூலம்  வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம் சரியாக ஓடவில்லை. பிறகு அவர் நடித்த ஓ மை காட் படம் அவரை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது என்றே சொல்லலாம். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். பிறகு அடுத்தடுத்த படங்களில் முழுநேர நடிகையாக நடித்து வருகிறார் நடிகை வாணி போஜன். பல்வேறு படங்கள், வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை நடிகையாக வலம் வந்து தற்போது வெள்ளித்திரையில் கோலோச்சி கலக்கி வருகிறார் நடிகை வாணி போஜன். அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் வாணி போஜன். தற்போது கடற்கரையோரம் பச்சை நிற சேலையில் கிறங்க வைக்கும் லுக்கில் உள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?

  • Ashna Zaveri: ஆத்தி கழண்டு விழுந்துட போகுது! உள்ளாடை போடாமல்.. கவர்ச்சியில் எல்லை தாண்டிய ஆஷ்னா சவேரி! கிளிக்
    on May 8, 2024 at 2:45 pm

    நடிகை ஆஷ்னா சவேரி எல்லை கடந்த கவர்ச்சியில்.. எடுத்து கொண்டுள்ள ஹாட் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.   மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை ஆஷ்னா சவேரி, ஒரு மாடலாக தன்னுடைய கேரியரை துவங்கியவர். பின்னர் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த நிலையில், நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை கடந்த 2014-ஆம் ஆண்டு பெற்றார். இதுவே இவரின் அறிமுக படமாகவும் அமைந்தது. இவர் சந்தானத்துடன் ஜோடி போட்ட முதல் படம், முதலுக்கு மோசமில்லாமல் வசூல் செய்த நிலையில்… மீண்டும் ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானாக விலகவில்லை! பிரியங்கா நல்காரி கதையை ஒரேயடியாக முடித்து வீட்டுக்கு அனுப்பிய ஜீ தமிழ்! அவரே போட்ட பதிவு! அடுத்தடுத்து சந்தானத்துடன் நடித்ததால், தமிழ் ரசிகர்கள் மனதில் மிக குறுகிய காலத்திலேயே இடம் பிடித்தார் ஆஷ்னா. பின்னர் நடிகர் காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக இவர் நடித்த ‘மீன் குழம்பும் மண் பானையும்’ திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் தேர்வு செய்து நடித்த பிரம்மா.காம், நாகேஷ் திரையரங்கம், போன்ற படங்கள் கைகொடுக்காத நிலையில், அதிரடியாக கவர்ச்சி கோதாவில் இறங்கினார். Siragadikka Aasai: முத்துவை காப்பாற்ற பாருக்கு செல்லும் மீனா.! செம்ம ட்விஸ்ட்… சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட் நடிகர் விமலுக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி நடித்த ‘இவனுக்கு எங்கேயோ மஞ்சம் இருக்கு’ திரைப்படத்தில் ரசிகர்களையே வெட்கப்படும் அளவுக்கு இவரின் கவர்ச்சி களைகட்டியது. இதுவே இவருக்கு பின்னடைவையும் ஏற்படுத்திய நிலையில்… சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகிறார். கடைசியாக கடந்த ஆண்டு இவர் நடித்த கன்னி தீவு என்கிற திரைப்படம் வெளியானது. அதே போல் MY3 என்கிற வெப் தொடரிலும் நடித்திருந்தார். Shaalin Zoya: பிச்சைக்கார நாயே.. பொறுக்கி என கோமாளியை அசிங்கமாக திட்டி சர்ச்சையில் சிக்கிய TTF வாசனின் காதலி! தற்போது பட வாய்ப்புக்காக கொக்கி போட்டு வரும் நடிகை ஆஷ்னா சவேரி… எல்லை கடந்த கவர்ச்சியில், உள்ளாடை அணியாமல் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் பார்த்து உடை கலந்து விழுந்துட போகுது கமெண்ட் போட்டு வருகின்றனர். 

  • உங்கள் குழந்தை ஏசி அறையில் தூங்குகிறதா? மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்..
    on May 8, 2024 at 2:45 pm

    உங்கள் குழந்தையை ஏசி அறையில் தூங்க வைக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். வெயில் சுட்டெரித்து வரும் இந்த கோடை காலத்தில் ஏசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. ஏசி அறைகளில் குழந்தைகள் தூங்குவது பொதுவானது என்றாலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். உங்கள் குழந்தையை ஏசி அறையில் தூங்க வைக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கைக்குழந்தைகளை ஏசியில் தூங்க வைப்பது சகஜம், ஆனால் சில முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதாவது ஏசியின் வெப்பநிலையை மிகவும் குறைவாக வைப்பதை தவிர்க்கவும். இது அசௌகரியத்தை ஏற்படுத்தும் மற்றும் உங்கள் குழந்தையின் தூக்கத்தை சீர்குலைக்கும். ஏசியின் வெப்பநிலையை அமைக்கும் போது கவனம் செலுத்துங்கள். குழந்தை மிகவும் குளிராக இருப்பதைத் தடுக்க உகந்த வெப்பநிலை 23 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இடையில், நீங்கள் அதை சிறிது குறைத்து மீண்டும் அதிகரிக்கலாம். உறங்கும் போது உஷ்ணத்தை பராமரிக்க உங்கள் குழந்தை போர்வையால் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்யவும். ஜலதோஷம், இருமல் அல்லது சளி போன்றவற்றுக்கு வழிவகுக்கலாம் என்பதால், ஆடைகளை மட்டும் அணிவதைத் தவிர்க்கவும்.   உங்கள் குழந்தையின் முகம், உள்ளங்கால்கள் அல்லது தலையில் நேரடியாக குளிர்ந்த காற்று வீசுவதைத் தடுக்க, உங்கள் குழந்தையை நேரடி ஏசி காற்றோட்டத்திலிருந்து விலக்கி வைக்கவும்.குழந்தையின் தலையில் காற்று வீசுவதால் தலைவலி ஏற்படலாம்.

  • பிறந்தநாள் டிரீட் கொடுப்பாரா பேட் கம்மின்ஸ்? டாஸ் வென்ற லக்னோ பேட்டிங்!
    on May 8, 2024 at 2:31 pm

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 57ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. லக்னோ அணியில் மோசின் கான் நீக்கப்பட்டுள்ளார். குயீண்டன் டி காக் இடம் பெற்றுள்ளார். மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மாயங்க் அகர்வால் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சன்வீர் சிங் இடம் பெற்றுள்ளார். மேலும், ஹைதராபாத் அணியில் விஜயகாந்த் வியாஷ்காந்த் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்: குயீண்டன் டி காக், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர், கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயூஷ் பதோனி, தீபக் கூடா, குர்ணல் பாண்டிய, கிருஷ்ணப்பா கௌதம், யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டிராவிஸ் ஹெட், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், ஷாபாஸ் அகமது, சன்வீர் சிங், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெயதேவ் உனத்கட், விஜயகாந்த் வியாஷ்காந்த், டி நடராஜன். இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 3 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் 55ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 33 போட்டியில் வெற்றியும், 21 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. இரு அணிகளும் இந்த மைதானத்தில் விளையாடிய ஒரு போட்டியிலும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. இந்த சீசனில் இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன. இதுவரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடிய 11 போட்டிகளில் 6ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி விளையாடிய 11 போட்டிகளில் 6ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் சாதிக்க காத்திருக்கும் வீரர்கள்: ஹென்ரிச் கிளாசென் ஒரு பவுண்டரி அடித்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 50 பவுண்டரி அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். கேஎல் ராகுல் 5 பவுண்டரி அடித்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 400 பவுண்டரி அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். நிக்கோலஸ் பூரன் 5 பவுண்டரி அடித்தால் 100 பவுண்டரி அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். தீபக் கூடா 5 பவுண்டரி அடித்தால் 100 பவுண்டரி அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 9 சிக்ஸர்கள் அடித்தால் 100 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். அபிஷேக் சர்மா தனது 100ஆவது டி20 போட்டியில் விளையாடுகிறார்.

  • எந்த தெய்வங்களுக்கு வாழை இலையில் அர்ச்சனை செய்ய வேண்டும் தெரியுமா..? அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன.?
    on May 8, 2024 at 2:19 pm

    உங்களுக்கு தெரியுமா.. இந்து மதத்தில் வாழை இலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, இது அனைத்து தெய்வ வழிபாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது.    இந்து மதத்தில் வாழை இலை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சொல்லபோனால், வாழை இலை மங்களம் மற்றும் தூய்மையின் சின்னமாக கருதப்படுகிறது. வாழை இலையில் விஷ்ணுவும் லட்சுமி தேவியும் வசிக்கிறார்கள். நவக்கிரக பூஜையில் ஒன்பது வாழை இலைகள் பயன்படுத்தப்படுகின்றது. திருமணம், இல்லறம், பெயர் சூட்டுதல் போன்ற சுப காரியங்களில் உணவுகள் பரிமாற வாழை இலை பயன்படுத்தப்படுகிறது. அதுமட்ட்,  கிரஹ பிரவேச நேரத்தில், வாழை இலையில் தான் அரிசி மற்றும் குங்குமம் போன்ற பல பொருகள் வைக்கப்படுகிறது. இந்து மத திருமணத்தில் மணமக்களை வாழை இலையில் அமர வைத்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, வாழை இலைகள் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டு வருகின்றது. மேலும், பிரதான நுழைவாயிலில் வாழை இலைகளை வைப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழையாது என்று சொல்லப்படுகின்றது. மேலும்,  வாழை இலையை வீட்டில் பூஜை அறையில் வைப்பதால் அமைதி கிடைக்கும். அதுமட்டுமின்றி பித்ரு தோஷத்தில் இருந்து நிவாரணம் பெற வாழை இலையில் அன்னதானம் செய்ய வேண்டும். இப்போது,   எந்தெந்த தெய்வங்களுக்கு  வாழை இலையில் அர்ச்சனை செய்வது நன்மை பயக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள். விஷ்ணு பகவான்: விஷ்ணு பகவானுக்கு வாழை இலையில் துளசி, தாமரை மலர்கள் மற்றும் பழங்களை வைத்து அர்ச்சனை செய்தால், திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு வரும் மற்றும் ஜாதகத்தில் கிரகங்களின் நிலை சரி செய்யப்படும். குறிப்பாக, விஷ்ணு பகவானின் ஆசிகள் தக்க வைக்கப்படுகிறது. விநாயகப் பெருமான்: விநாயகப் பெருமானுக்கு வாழை இலைகள் மிகவும் பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே, விநாயகருக்கு வாழை இலையில் அர்ச்சனை செய்தால், புதன் தோஷம் நீங்கும் மற்றும் வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனையையும் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. லட்சுமி தேவி: லட்சுமி தேவிக்கு வாழை இலையில் அர்ச்சனை செய்தால், நல்ல பலன்கள் வரும். அதுமட்டுமின்றி, செல்வங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், வாழ்க்கையில் பணத்திற்கு ஒருபோதும் வராது. இது தவிர, நீங்கள் நிதி நெருக்கடியில் இருந்தால், அதிலிருந்தும் உங்களுக்கு  நிவாரணம் கிடைக்கும்.   துர்கா தேவி: துர்கா தேவிக்கு வாழை இலையில் அர்ச்சனை செய்தால், வாழ்க்கையில் எந்தக் குறையும் ஏற்படாது என்பது ஐதீகம். அதுமட்டுமய், வேலையில் இருக்கும் தடைகள் நீங்கும்.

  • இனவெறிக் கருத்து சர்ச்சை.. வலுத்த எதிர்ப்பு.. ராஜினாமா செய்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாம் பிட்ரோடா..
    on May 8, 2024 at 2:15 pm

    காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா கூறிய சர்ச்சை கருத்துக்கள் பேசுபொருளாகி உள்ளது. சாம் பிட்ரோடா  பேசியதாவது, “இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போன்றவர்கள். மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போன்றவர்கள். வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போன்றவர்கள். தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போன்றவர்கள். இருப்பினும் நாம் அனைவரும் சகோதரி சகோதர்கள்” என்று கூறினார். இந்தியர்களின் நிறம் குறித்த சாம் பிட்ரோடாவின் கருத்து இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம், வாரங்கல்லில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். தோல் நிறத்தை வைத்து இந்தியர்களை மதிப்பிடுவது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இனவெறி கருத்து சர்ச்சைக்கு மத்தியில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா விலகினார். ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளராகக் கருதப்படும் பிட்ரோடா, கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த முடிவை எடுத்துள்ளார். அவரது முடிவை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஏற்றுக்கொண்டார். பதட்டமான சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சி சாம் பிட்ரோடாவின் கருத்துக்களில் இருந்து விலகிக் கொண்டது. மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தனது கட்சிக்கு எதிரான கோபத்தைக் குறைக்க முன்வந்தார் என்றே சொல்லலாம். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பிட்ரோடா பேசியது மிகவும் துரதிர்ஷ்டவசமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்திய தேசிய காங்கிரஸ் இந்த ஒப்புமைகளிலிருந்து தன்னை முற்றிலும் விலக்கிக் கொள்கிறது” என்று கூறியிருந்தார். விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?

  • சிறையில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அறையில் அடைத்து சித்ரவதை; நீதிபதி முன்பாக சவுக்கு சங்கர் முறையீடு
    on May 8, 2024 at 2:13 pm

    பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள், பெண் போலீஸார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அந்த கைது நடவடிக்கையின் போது போது கஞ்சா வைத்திருந்ததாக சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிந்தனர். அந்த வழக்கில் சவுக்குசங்கர் நேற்று (மே 7) மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக கோவையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். பெண்களை இழிவாக பேசியதால் சவுக்கு சங்கர் கைதா? அப்போது பாதி திமுக. காரர்கள் சிறையில் தான் இருக்க வேண்டும் – வானதி சீனிவாசன் விமர்சனம் அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிந்தனர். அந்த வழக்கில் சவுக்குசங்கர் நேற்று (மே 7) மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக கோவையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். வீட்டில் ஒருவராக வளர்ந்த பசுவுக்கு வளைகாப்பு நடத்திய விவசாய தம்பதி; தென்காசியில் நெகிழ்ச்சி அப்போது கோவை சிறையில் தனக்கு பாதுகாப்பில்லை. என்னை 10 காவலர்கள் சேர்ந்து தாக்கினார்கள். என்னை மதுரை அல்லது தஞ்சை சிறைக்கு மாற்றம் செய்யுங்கள். மேலும் தன்னை மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அறையில் அடைத்து வைத்துள்ளதாக முறையிட்டார். மே 22 வரை 15 நாட்கள் சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கோவை சிறைக்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.

  • வெஸ்ட் நைல் காய்ச்சலால் ஒருவர் பலி.. எச்சரிக்கை விடுத்த கேரள அரசு..
    on May 8, 2024 at 1:53 pm

    மலப்புரம், கோழிக்கோடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிப்பு பரவியதை அடுத்து, கேரள சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து கேரளதுறை அமைச்சர் வீணா ஜார்ஜ், மாநிலத்தில் துப்புரவு மற்றும் சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும் வெஸ்ட் நைல் காய்ச்சலுக்கு எதிராக கேரள அரசு மாநிலத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, மே 3 அன்று திருச்சூரில் உள்ள வாடனப்பள்ளியைச் சேர்ந்த 79 வயது முதியவர் வெஸ்ட் நலை காய்ச்சல் காரணம் என்று கூறப்படுகிறது. கோழிக்கோட்டில் இதுவரை 5 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மலப்புரத்திலும் இரண்டு சந்தேகத்திற்கிடமான பாதிப்பு பதிவாகி உள்ளன. ஆபத்து…ஆபத்து!! 30 வயதிற்குப் பிறகு பெண்களைத் தாக்கும் கால்சியம் சத்துக் குறைபாடு.. அறிகுறிகள் இதோ! விழிப்புணர்வு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலும் அமைக்கப்பட்டது. மாவட்ட திசையன்விளை கட்டுப்பாட்டு பிரிவு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாதிரிகளை சேகரித்து, பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல், கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில், வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிப்பு உள்ளது, எனவே, கவலைப்பட தேவையில்லை என, சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். காய்ச்சல் அல்லது வேறு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் கேட்டுக் கொண்டார். வெஸ்ட் நைல் காய்ச்சலின் அறிகுறிகள் ஜப்பானிய காய்ச்சலைப் போலவே இருந்தாலும், அது அவ்வளவு தீவிரமானதல்ல என்று சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறினார். இருப்பினும் கவனமாக இருங்கள் என்றார். மக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தேங்கி நிற்கும் தண்ணீரைப் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெஸ்ட் நைல் காய்ச்சல் என்றால் என்ன? வெஸ்ட் நைல் காய்ச்சல் என்பது வெஸ்ட் நைல் வைரஸால் ஏற்படுகிறது, இது க்யூலெக்ஸ் கொசுவால் பரவுகிறது. இருப்பினும், இது ஜப்பானிய காய்ச்சலைப் போல ஆபத்தானது அல்ல. ஜப்பானிய காய்ச்சல் பொதுவாக 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது, வெஸ்ட் நைல் காய்ச்சல் பெரியவர்களை பாதிக்கிறது. இரண்டுமே கொசுக்களால் பரவும் நோய்கள். ஜப்பானிய காய்ச்சலுக்கு தடுப்பூசி உள்ளது, வெஸ்ட் நைல் காய்ச்சலுக்கு தடுப்பூசி இல்லை.. மேற்கு நைல் காய்ச்சல் முக்கியமாக க்யூலெக்ஸ் இனத்தைச் சேர்ந்த கொசுக்களால் பரவுகிறது. பறவைகளுக்கும் தொற்று ஏற்படுகிறது. இந்த வைரஸ் முதன்முதலில் 1937 இல் உகாண்டாவில் கண்டுபிடிக்கப்பட்டது. மாநிலத்தில் முதன்முதலில் 2011 ஆம் ஆண்டு ஆலப்புழாவில் இந்த நோய் கண்டறியப்பட்டது. Health Tips : கோடை காலத்தில் ஏன் சளி பிடிக்கிறது? அதனை எப்படி தடுப்பது? வெஸ்ட் நைல் காய்ச்சலின் அறிகுறிகள் தலைவலி, காய்ச்சல், தசைவலி, தலைச்சுற்றல் மற்றும் நினைவாற்றல் இழப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகள். பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு அறிகுறிகள் தெரிவதில்லை.. சிலருக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும். 1% மக்களில், மூளை பாதிப்பு சுயநினைவின்மை மற்றும் சில நேரங்களில் மரணத்திற்கு வழிவகுக்கும். ஆனால், ஜப்பானிய காய்ச்சலுடன் ஒப்பிடும்போது இறப்பு விகிதம் ஒப்பீட்டளவில் குறைவு. தடுப்பு மற்றும் சிகிச்சை வெஸ்ட் நைல் வைரஸுக்கு எதிராக மருந்து அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை. கொசுக் கடியைத் தவிர்ப்பதே சிறந்த தடுப்பு முறையாகும். உடலை மறைக்கும் ஆடைகளை அணிவது, கொசுவலை பயன்படுத்துவது, கொசு விரட்டி க்ரீம் பூசுவது, கொசுவலை மற்றும் மின்சார கொசு விரட்டி சாதனங்கள் உபயோகிப்பது பயனுள்ளதாக இருக்கும். கொசு மூலத்தை அழிப்பதன் மூலம் தொற்றுநோயைத் தடுக்கலாம். சுய மருந்து செய்ய வேண்டாம், ஏனெனில் இது நோயை சிக்கலாக்கும். மேற்கு நைல் காய்ச்சலுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்தால் குணமாகும்.

  • பெண்களை இழிவாக பேசியதால் சவுக்கு சங்கர் கைதா? அப்போ பாதி திமுக.காரர்கள் சிறையில் தான் இருக்க வேண்டும் – வானதி
    on May 8, 2024 at 1:45 pm

    கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று சட்டமன்ற அலுவலகம் முன்பு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானதி சீனிவாசன், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான வெயில் பதிவாகக்கூடிய இடங்களாக தமிழகம் மாறிக்கொண்டிருக்கிறது. தமிழகம் வெகு வேகமாக தொழிற்சாலைகளை பெருக்குவதிலும், நகரப்புறமாக்குவதிலும் இந்தியாவிலேயே முதன்மையில் இருக்கக்கூடிய மாநிலம். இவை காலத்தின் தேவை என்றாலும் கூட அந்த வளர்ச்சி என்பதும், வேலை வாய்ப்பு என்பதும் சுற்றுப்புற சூழலோடு இணைந்து வந்தால் தான் அங்கு மக்கள் வாழக்கூடிய இடங்களாக இருக்கும்.  குடிநீர் தட்டுப்பாடு என்பது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிலவிக் கொண்டிருக்கிறது. அதற்காக சிறப்பு நிதி ஒதுக்கினால் போதாது. லாரிகள் மூலம் தண்ணீர் குடிப்பதில் மிகப்பெரிய ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. எத்தனை லாரிகள் வந்தது என்று தெரியாது. அதில் முழுமையாக தண்ணீர் வந்ததா என தெரியாது. குடிநீர்  வழங்குவதில் சரியான முறையை பயன்படுத்தி அந்த பணம் சரியாக செலவழிக்கப்படுகிறதா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும்.  வீட்டில் ஒருவராக வளர்ந்த பசுவுக்கு வளைகாப்பு நடத்திய விவசாய தம்பதி; தென்காசியில் நெகிழ்ச்சி திமுக அரசு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு, குடிநீர் பிரச்சனை, வறட்சி  இது போன்ற விஷயங்களில் கவனத்தை செலுத்துவதை விட்டுவிட்டு யாரெல்லாம் சமூகவலைதளங்களில் பதிவிடுகிறார்களோ, யார் மாநில அரசுக்கு எதிராக குறிப்பாக திமுக குடும்பத்துக்கு எதிராக இருக்கிறார்களோ, அவர்கள் மீது வழக்கு போடுவது, சிறையில் அடைப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். எது மக்கள் பிரச்சனையோ அதற்கு முக்கியத்துவம் தராமல் எங்கள் அதிகாரத்தை எப்படி காட்டுகிறோம் என்ற வீதியில் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதாக தெரிவித்தார்.  மேலும் சவுக்கு சங்கர் எங்கள் மீது செய்யாத விமர்சனம் கிடையாது. மோசமான விமர்சனங்களை எனக்கும் செய்திருக்கிறார். தங்கள் அதிகாரத்தை மாநில அரசு எவ்வளவு துஷ்பிரயோகம் செய்கிறது என்பதை பார்க்க வேண்டும். இவர்களுக்கு எதிராக பேசினால் எந்த எல்லைக்கும் செல்வார்கள். இந்த அரசு இவ்வளவு மோசமாக அதிகாரத்தை பயன்படுத்துகிறது என்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை, போதை பிரச்சனை, கண் முன்னால் அடுத்த தலைமுறை  வீணாகி கொண்டிருப்பதை தமிழகத்தில் பார்க்க முடிகிறது, எதற்கு முக்கியத்துவம் தர வேண்டுமோ அதற்கு இந்த அரசு முக்கியத்துவம் தரவில்லை. ஒருவர் மீது வழக்கு போடுவது என்றால் கஞ்சா வழக்கு போடுவதை நீண்ட ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதை தற்போதும் திமுக அரசு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கிராமங்களிலும் கஞ்சா போடுவதற்கும் போதை போடுவதற்கும் திமுகவினருடன் உள்ளவர்கள் தான் பெரிய தொழிலாக நடத்துகிறார்கள்.  கொலையாளியை பிடிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்; திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தவர்களால் பரபரப்பு அதை விட்டுவிட்டு கஞ்சா வழக்கு போடுவதை தற்போது திமுக அரசு தொடர்வது கேவலமானது. சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்பதில் உண்மை தெரியாது. ஆனால் கைது செய்யப்பட்டபோது மாநில அரசு மீது சந்தேகம் வருகிறது. அவ்வாறு தாக்கப்பட்டு இருந்தால் இந்த அரசு கேவலமான முன்னுதாரணங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என தான் அர்த்தம்.  பெண்களுக்கு எதிராக பேசியதாக வழக்கு எனக் கூறினால் திமுகவில் பாதிக்கும் மேல் கைது செய்திருக்க வேண்டும். திமுகவினர் பேசுவதெல்லாம் பெண்களுக்கு எதிராக தெரியவில்லையா? பெண் காவலர்களை இழிவாக பேசிவிட்டார் என பொங்குகின்ற அரசு, திமுகவினர் எவ்வளவு தூரம் பெண்களை கேவலமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வைத்த விமர்சனங்கள் எப்படிப்பட்ட வகையைச் சேர்ந்தது எனவும் சுட்டிக்காட்டியவர், தற்போது திடீரென பெண் காவலர்களாக உருமாறிவிட்டார்கள். ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் திமுகவினர் பெண்களை எவ்வாறு கேவளமாக பேசுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

  • முழு சார்ஜில் 170 கிமீ பேமிலியாக சுற்றலாம்.. புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய iVOOMi..
    on May 8, 2024 at 1:34 pm

    இந்திய வாகன சந்தையில் ஐவூமி எனர்ஜி தனது புதிய மின்சார ஸ்கூட்டரான iVOOMi JeetX ZE ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது முழு சார்ஜில் 170 கிலோமீட்டர் வரை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. ஐவூமி ஜீட்எக்ஸ் ஜிஇ (JeetX GE) என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 3 வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாறுபாடுகள் 2.1kWh, 2.5kWh மற்றும் 3kWh பேட்டரி பேக்குகளுடன் வருகின்றன. அவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.79,999 இல் தொடங்குகிறது. கிரே, ரெட், கிரீன், ரோஸ், கோல்ட், ப்ளூ, சில்வர் மற்றும் பிரவுன் ஆகிய 8 வண்ணத் தேர்வுகளில் வாடிக்கையாளர்கள் வாங்க வாய்ப்பு உள்ளது. JeetX GE இன் முன்பதிவு மே 10 முதல் தொடங்கும். அதன் நீளம் 760 மிமீ, இருக்கை உயரம் 770 மிமீ மற்றும் வீல்பேஸ் 1350 மிமீ. அதன் இருக்கை மிகவும் பெரியது ஆகும். நீண்ட தூர பயணங்களுக்கு சௌகரியம் மற்றும் சிறந்த சவாரி அனுபவத்தை வழங்குவதாக கூறப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது பெரிய லெக்ரூம் மற்றும் பூட் ஸ்பேஸைக் கொண்டுள்ளது. அதில் மக்கள் தங்களுக்குத் தேவையான நிறைய பொருட்களை வைத்திருக்க முடியும். Mileage Bike: மைலேஜ் 70 கிமீ.. விலையோ ரூ.60 ஆயிரம் தான்.. நல்ல மைலேஜ் பைக்கை உடனே வாங்குங்க..

  • நானாக விலகவில்லை! பிரியங்கா நல்காரி கதையை ஒரேயடியாக முடித்து வீட்டுக்கு அனுப்பிய ஜீ தமிழ்! அவரே போட்ட பதிவு!
    on May 8, 2024 at 1:26 pm

    சன் டிவி ‘ரோஜா’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா நல்காரி ‘நளதமயந்தி’ தொடரில் இருந்து நானாக விலகவில்லை என, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.   ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட சீரியல்களில் ஒன்று நலமயந்தி. பணத்தைவிட ஒருவரின் பசியை நீக்குவதே சிறந்தது என நினைக்கும் கதாநாயகிக்கும், எல்லாவற்றையும் பிஸினஸாக  பார்க்கும் ஹீரோவுக்கும், எப்படி திருமணம் ஆகிறது என்பதே இந்த சீரியலின் விறுவிறுப்பான கதைக்களம்.   இந்த தொடரில் ‘சீதாராமன்’ தொடரில் இருந்து விளக்கிய பின்னர், பிரியங்கா நல்காரி கமிட் ஆகி நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக பிரபல நடன இயக்குனர் நந்தா நடித்து வருகிறார். டிஆர்பி-யில் கொஞ்சம் பின் தங்கி இருந்தாலும், விறுவிறுப்பான கதைகளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது நளதமயந்தி தொடர். Ninaithen Vanthaai: எழிலால் ஷாக்கான மனோகரி.. சுடர் கொடுத்த பதிலடி! நினைத்தேன் வந்தாய் அப்டேட் !   இந்நிலையில் ‘நளதமயந்தி’ தொடரில் இருந்து பிரியங்கா நல்காரி திடீரென விலகி விட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை உறுதி செய்வது போல், பிரியங்கா நல்காரி விபத்தில் சிக்கி இறப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றது. மேலும் மற்றொரு நாயகியாக தற்போது விஜய் டிவி, செந்தூரப்பூவே சீரியல் மூலம் அறிமுகமான ஸ்ரீநிதி என்ட்ரி கொடுத்துள்ளார். எனவே இனி ஸ்ரீநிதி – நந்தாவை மையமாக வைத்தே இந்த தொடர் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   பிரியங்கா நல்காரி விலகியதாக வெளியான தகவலை தொடர்ந்து, தற்போது அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் போட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது. அதில், ‘நளதமயந்தி’  சீரியலில் இருந்து நானாக விலகவில்லை. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் திடீரென இப்படி நடந்துள்ளது. அதற்கு காரணம் தேவை… உங்கள் அனைவருக்கும் விரைவில் அது தெரியவரும் என பதிவிட்டுள்ளார். Siragadikka Aasai: முத்துவை காப்பாற்ற பாருக்கு செல்லும் மீனா.! செம்ம ட்விஸ்ட்… சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்   பிரியங்காவின் இந்த பதிவின் மூலம், அவர் தொடரில் இருந்து விலகவில்லை, அவரை ஒரேடியாக விலக்கி உள்ளனர் என்பது தெரிகிறது. எனினும் சீரியல் தயாரிப்பு நிறுவனம் அல்லது இயக்குனரிடம் இருந்து இவரை வெளியேற்றியதற்கான விளக்கம் கிடைக்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

  • எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்? மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாய்ப்பே இல்ல!
    on May 8, 2024 at 1:23 pm

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரானது பரபரப்பான கட்டத்தை எட்டிய நிலையில், மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 12 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடக்க விழா நிகழ்ச்சியுடன் பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரையில் நடைபெற்ற 56 லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் 11 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மட்டும் 12 போட்டிகளில் விளையாடியுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 11 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இதே போன்று, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடிய 11 போட்டிகளில் 8 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 11 போட்டிகளில் 6ல வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடிய 11 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளும் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5 மற்றும் 6ஆவது இடங்களில் உள்ளன. மற்ற அணிகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் 8 புள்ளிகளுடன் 7, 8, 9 மற்றும் 10 ஆவது இடங்களில் உள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் சாம்பியனான நிலையில், 2023 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த 2 சீசன்களிலும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் 7, 8, 9 மற்றும் 10 ஆவது இடங்களில் உள்ள அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு முறையே 3 சதவிகிதம், பஞ்சாப் கிங்ஸ் 3 சதவிகிதம், குஜராத் டைட்டன்ஸ் 2 சதவிகிதம் மற்றும் மும்பை இந்தியன்ஸ் 0 சதவிகிதம். ஆகையால், இந்த 4 அணிகளும் பிளே ஆஃப் வாய்ப்பிற்கு முன்னேறுமா என்பது சந்தேகம் தான். இந்த அணிகள் தவிர 5 மற்றும் 6ஆவது இடங்களில் உள்ள லக்னோ பிளே ஆஃப் வாய்ப்பிற்கு செல்ல 49 சதவிகிதமும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 32 சதவிகிதம் வாய்ப்புகள் இருக்கிறது. இவைகள் தவிர தற்போது புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள கொல்கத்தாவிற்கு 99 சதவிகிதமும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 97 சதவிகிதமும் பிளே ஆஃப் வாய்ப்புகள் உள்ளன. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 59 சதவிகிதம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 56 சதவிகிதம் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், தற்போது சிஎஸ்கே, எஸ்ஆர்ஹெச், டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் 12 புள்ளிகள் பெற்று 3, 4, 5 மற்றும் 6ஆவது இடங்களில் உள்ளன. இந்த அணிகளுக்கு இடையில் தான் தற்போது போட்டி நிலவுகிறது. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றுவிடும். மேலும் மற்ற 3 இடங்களில் உள்ள அணிகள் 2 தகுதிச் சுற்று மற்றும் ஒரு எலிமினேட்டர் போட்டியில் மோதும். இதில் கடைசியில் வெற்றி பெறும் அணி 2ஆவது அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இன்று நடைபெறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேக்கிங் நியூஸ், விளையாட்டு, டிவி, ரேடியோ மற்றும் பல. சர்வதேச செய்திகள் முதல் தேசியச் செய்திகள், அரசியல் முதல் சமூகம், பாதுகாப்பு முதல் தற்போதைய விவகாரங்கள், தொழில்நுட்பச் செய்திகள் முதல் பொழுதுபோக்குச் செய்திகள் வரை உள்ளடக்கிய IOB செய்தி வலையமைப்பு, ஒவ்வொரு செய்தி கவரேஜும் பாரபட்சமற்றது, அறிவுப்பூர்வமாக பகுப்பாய்வு செய்யப்பட்டது, நம்பகமானது மற்றும் நம்பகமானது. IOB நியூஸ் நெட்வொர்க் தகவல், கல்வி மற்றும் பொழுதுபோக்கு – நீங்கள் எங்கிருந்தாலும், உங்கள் வயது என்னவாக இருந்தாலும்.